வெள்ளி, 1 ஜூலை, 2011

ஸ்ரீவைகுண்டம் ஆற்றில் குதித்து பெண் தற்கொலை

ஸ்ரீவைகுண்டத்தில் குடும்பத்தகாராறு காரணமாக பூ வியாபாரி மனைவி ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

ஸ்ரீவைகுண்டம் தெப்பகுளத்தெருவைச் சேர்ந்த உலகநாதன் மனைவி விஜயலெட்சுமி (21). உலகநாதன் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி 6 மாத குழந்தை உள்ளது.

நேற்று முன்தினம் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த விஜயலெட்சுமி வீட்டை விட்டு வெளியேறினார்.

இந்நிலையில் ஆற்றில் பெண் பிணமாக மிதப்பதைப் பார்த்து ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் பரபரப்பாக பேசினர். இதையறிந்ததும் விஜயலெட்சுமியின் உறவினர்கள் அங்கு சென்று பார்த்தனர். ஆற்றில் பிணமாக மிதந்துகொண்டிருந்தது விஜயலெட்சுமியின் உடல்தான் என்பதை அடையாளம் கண்டனர். இவரது உடலைக்கண்டதும் உறவினர்கள் கதறி அழுதனர்.

இச்சம்பவம் குறித்து கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த சங்கரன் மகன் சிவகுமார் (29) ஸ்ரீவைகுண்டம் போலீசில் புகார் கொடுத்தார். இவர் கொடுத்த புகாரின் பேரில், ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் ஆலோசனையின் பேரில் ஸ்ரீவைகுண்டம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பேச்சி வழக்குப்பதிவு செய்து விஜயலெட்சுமியின் உடலை கைப்பற்றி ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.

உலகநாதனுக்கும், விஜயலெட்சுமிக்கும் திருமணமாகி இரண்டு ஆண்டுகளே ஆனதால் தூத்துக்குடி மாவட்ட சப் கலெக்டர் சஜன்சிங் சவான் இச்சம்பவம் குறித்து நேற்று விசாரணை நடத்தினார்.

தகவல் : தூத்துக்குடி இணைதளம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin