சனி, 11 ஜூன், 2011

ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் ஜமாபந்தி துவக்க விழா நடத்தது

ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் ஜமாபந்தி துவங்கியது. மனுக்கொடுத்த அன்றே பயனாளிகளுக்கு தீர்வு, வருவாய் துறையினரின் அதிரடி நடவடிக்கையால் பயனாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் ஜமாபந்தி மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட சார்ஆட்சியர் லதா தலைமை வகித்தார். ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் வசந்தா முன்னிலை வகித்தார்.

ஜமாபந்தியில் முதியோர் பெண்கள் திருமண உதவித்திட்டம் சான்று விண்ணப்பம் பட்டா மாறுதல் என வரும் பயனாளிகளின் விண்ணப்பங்கள் அன்றே தீர்வு காணபட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. முதியோர் பென்சன் கேட்டு விண்ணப்பித்த அருணாசலம் திருமண உதவித் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த முருகன் லட்சுமி ஆகியோருக்கு காசோலைகளை சார் ஆட்சியர் லதா வழங்கினார்.

நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்பு நலத்திட்ட தாசில்தார் நயினார் பிள்ளை, துணை தாசில்தார் லிங்கராஜ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நன்றி : தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin