சனி, 11 ஜூன், 2011

தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 15ஆம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும், என மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவிப்பு


தமிழகம் முழுவதும் சமச்சீர் கல்வி திட்டம் இந்த ஆண்டில் அமல்படுத்த முந்தைய திமுக அரசு முடிவு செய்தது. ஆனால் அதிமுக அரசு பதவி ஏற்றதால் சமச்சீர் கல்வி திட்டம் ரத்து செய்யப்பட்டு முந்தைய பாடத்திட்டம் செயல்படும் என்று அறிவித்தது.

இதனால் புதிய புத்தகம் அச்சடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் கடந்த ஜூன் 1ம் தேதி திறக்க வேண்டிய பள்ளிகள் வரும் 15ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டது

இதனை பள்ளி தலைமையாசிரியர்கள் அனைவருக்கும் தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதா அனுப்பிய சுற்றறிக்கை வழங்கப்பட்டது. அந்த சுற்றறிக்கை படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் வரும் 15ஆம் தேதி திறக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி உத்தரவிட்டார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin