திங்கள், 13 ஜூன், 2011

இன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சி.என்.மகேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

விழாவையொட்டி வருகிற 13ம் தேதி (திங்கட்கிழமை) தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.

ஆனால் 13ம் தேதி அரசு தேர்வுகள் ஏதேனும் அறிவிக்கப்பட்டு இருந்தால் சம்பந்தப்பட்ட மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், தொடர்புடைய பணியாளர்களுக்கு மட்டும் இந்த விடுப்பு பொருந்தாது. இது செலாவணி முறிவு சட்டத்தின்படி பொதுவிடுமுறை நாள் அல்ல என தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடுமுறைக்குப் பதிலாக 09-07-2011 அன்று அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது என்று ஆட்சியர் அறிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin