வெள்ளி, 3 ஜூன், 2011

ஸ்ரீவையில், இலவச அரிசி திட்ட தொடக்க விழா

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூன் 1 முதல் மாதந்தோறும் 20 கிலோ இலவச அரிசி விநியோகிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

அதன்படி ஸ்ரீவைகுண்டம் கீழபஜாரில் உள்ள அமுதம் 2-வது எண் ரேஷன் கடையில் இலவச அரிசி திட்ட தொடக்க விழா நடைபெற்றது.மாதம் முழுவதும் எப்போது வேண்டுமானாலும் இலவச அரிசியை வாங்கி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

சமூகப் பாதுகாப்பு நலத்திட்ட சாராட்சியர் லதா, திட்டத்தைத் தொடங்கி வைத்தார். ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் வசந்தா, வட்ட வழங்கல் அலுவலர் முத்துராமலிங்கம், தனிவருவாய் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ரேஷன் கடைகள் உரிய நேரத்தில் திறக்கப்படவில்லை என்றாலோ, வழங்கப்படும் அரிசியின் தரம் ஆகியவற்றில் குறைபாடுகள் இருந்தாலோ சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள வட்ட வழங்கல் அலுவலரிடமோ, மாவட்ட வழங்கல் அலுவலரிடமோ செல்போன் மூலம் தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ரேஷன் கடை குறைபாடுகளை புகார் தெரிவிக்க - 9445000372 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். மேலும் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளரை 9486504392 என்ற எண்ணிலும், மாவட்ட வழங்கல் அலுவலரை 9445000370 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin