சனி, 4 ஜூன், 2011

100 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படாத ஸ்ரீவைகுண்டம் அணை !

ஸ்ரீவைகுண்டம் அணை கட்டு 1873-ல் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. இந்த அணையில், சுமார் இரண்டு லட்சம் சதுரஅடி பரப்பில் தண்ணீரைத் தேக்கி வைக்கலாம்.
ஆனால், சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக அணை தூர்வாரப்படாமல் மணல் மேடாக காட்சியளிக்கிறது.

இவை முறையாக தூர்வாரப் படாததால், குளங்களின் மொத்த கொள்ளளவு சுமார் 1000 மில்லியன் கனஅடியாக குறைந்துள்ளதாகவும், 32,601 ஏக்கர் நிலங்களில் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

8 அடி இருக்கவேண்டிய அணையின் உயரம், 2 அடி தண்ணீரைக்கூட தேக்கி வைக்க முடியாத வகையில் உள்ளது. அணைப்பகுதி முழுவதும் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமலைச் செடிகள் ஆக்கிரமித்துள்ளன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீவைகுண்டம் குமர குருபரர் சுவாமிகள் கலைக்கல்லூரியின் காந்திய சிந்தனை மையத்தினர் அமலைச் செடிகளை அகற்றினர். அதனை தொடர்ந்து பராமரிக்காமல், பொதுப்பணித் துறை அதிகாரிகள் அலட்சியம் செய்ததால் மீண்டும் அமலைச் செடிகளின் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

இதுதொடர்பாக பல்வேறு தரப்பிலும் அறிவுறுத்தியும், அமலைச் செடிகளை அகற்றவோ, அணையைத் தூர்வாரவோ அரசுத் தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஸ்ரீவைகுண்டம் அணைப் பகுதிகளில் 53 குளங்கள் உள்ளன. இந்தக் குளங்களின் மொத்த கொள்ளளவு 2274.27 மில்லியன் கனஅடி

தூர்ந்துபோன அணைக்கட்டுகளையும், குளங்களையும் தூர்வாரினால் மட்டுமே பருவமழை மற்றும் தாமிரபரணியின் கருணையால் கிடைக்கும் தண்ணீரை சேமிக்க முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin