புதன், 1 ஜூன், 2011

ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் இன்று ஜமாபந்தி தொடக்கம்

ஸ்ரீவைகுண்டம் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளுக்கான ஜமாபந்தி இன்று முதல் தொடங்குகிறது.

இது குறித்து வட்டாட்சியர் வசந்தா கூறியதாவது: ஸ்ரீவைகுண்டம் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளுக்கான ஜமாபந்தி ஜூன் 1-ம் தேதி சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் லதா தலைமையில், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

ஜூன் 1-ம் தேதி வல்லநாடு உள்வட்டப் பகுதிகளான கலியாவூர், உழக்குடி, ஆலந்தா, பூவாணி, சிங்கத்தாக்குறிச்சி, வடவல்லநாடு, வல்லநாடு ஆகிய பகுதிகளுக்கு நடைபெறுகிறது.

2-ம் தேதி ஆழிக்குடி, முறப்பநாடு புதுக்கிராமம், கீழப்புத்தநேரி, முறப்பநாடு கோவில்பத்து, வசவப்பபுரம், தெய்வச்செயல்புரம் உள்வட்டப் பகுதிகளான செக்காரக்குடி பகுதி- 1, மீனாட்சிபுரம், செக்காரக்குடி பகுதி- 2 ஆகிய பகுதிகளுக்கு நடைபெறுகிறது.

3-ம் தேதி வடக்குகாரசேரி, தெய்வச்செயல்புரம், செட்டிமல்லன்பட்டி, எல்லைநாயக்கன்பட்டி, கீழவல்லநாடு, நாணல்காடு, மணக்கரை ஆகிய பகுதிகளுக்கு நடைபெறுகிறது.

7-ம் தேதி ஆழ்வார்கற்குளம், ஆராம்பண்ணை, கொங்கராயக்குறிச்சி ஆகிய பகுதிகளுக்கும், செய்துங்கநல்லூர் உள்வட்டப் பகுதிகளான விட்டிலாபுரம், விட்டிலாபுரம் கோவில்பத்து, முத்தாலங்குறிச்சி, செய்துங்கநல்லூர் ஆகிய பகுதிகளுக்கு நடைபெறுகிறது.

8-ம் தேதி கருங்குளம், தெற்குகாரசேரி, சேரகுளம், வல்லகுளம், கால்வாய், ஆறுமுகமங்கலம் உள்வட்டப் பகுதிகளான ஆறுமுகமங்கலம், சிறுத்தொண்டநல்லூர் ஆகிய பகுதிகளுக்கு நடைபெறுகிறது.

9-ம் தேதி வாழவல்லான், திருப்பணிசெட்டியா பத்து, கொற்கை, கொடுங்கனி, கொட்டாரக்குறிச்சி, மாரமங்கலம், அகரம் ஆகிய பகுதிகளுக்கு நடைபெறுகிறது.

10-ம் தேதி மஞ்சள்நீர்க்காயல், பழையகாயல், முக்காணி, தன்னூத்து, சிவகளை, கீழப்பிடாகை அப்பன்கோவில், கீழப்பிடாகை ஆகிய பகுதிகளுக்கு நடைபெறுகிறது.

14-ம் தேதி மங்கலக்குறிச்சி, பெருங்குளம், நட்டாத்தி, திருப்பணிசெட்டிகுளம், சாயர்புரம், இருவப்பபுரம் பகுதி- 1, இருவப்பபுரம் பகுதி- 2 ஆகிய பகுதிகளுக்கு நடைபெறுகிறது.

15-ம் தேதி ஸ்ரீவைகுண்டம் உள்வட்டப் பகுதிகளான வேளூர், வேளூர் ஆதிச்சநல்லூர், தோழப்பன்பண்ணை, பத்மநாபமங்கலம், அணியாபரநல்லூர், ஸ்ரீமூலக்கரை, ஸ்ரீவைகுண்டம் ஆகிய பகுதிகளுக்கு நடைபெறுகிறது.

16-ம் தேதி வேளூர் புதுக்குடி, ஸ்ரீபராங்குச நல்லூர், திருப்புளியங்குடி, கீழ்பிடாகை வரதராஜபுரம், பராக்கிரமபாண்டி, பேரூர் ஆகிய பகுதிகளுக்கு நடைபெறுகிறது என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin