புதன், 1 ஜூன், 2011

பேட்மாநகரம் எம்.எம்.மெட்ரிக் பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி

ஸ்ரீவைகுண்டம் அருகே பேட்மாநகரத்தில் உள்ள எம்.எம்.மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்துள்ளனர்.

ஸ்ரீவைகுண்டம் அருகே பேட்மாநகரம் எம்.எம்.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அனைத்து மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பள்ளியில் முதலாவதாக சௌரத் 468 மதிப்பெண்களும், முஹ்சினா பீவி 451 மதிப்பெண்களும், மணிகண்டன் 426 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.

சாதனை படைத்த மாணவர்களையும், பயிற்சி அளித்த ஆசிரியர்களையும் பள்ளியின் தாளாளர் ரெனால்ட் முகமது மீரான், பேராசிரியர் நிசார், தலைமையாசிரியர் விஜய் மற்றும் பெற்றோர்கள், பொதுமக்கள் பாராட்டினர்

தகவல் : தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin