வியாழன், 17 செப்டம்பர், 2009

இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் விஜயகாந்த்


தே.மு.தி.க. சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னை துறைமுகம், மரைக்காயர் தெருவில் உள்ள ஆஷா மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் தலைமை தாங்கி, நோன்பு கஞ்சி குடித்தார். மத்திய சென்னை மாவட்ட செயலாளர் க.செந்தாமரைக்கண்ணன், பகுதி செயலாளர் விசாகன்ராஜா, கவுன்சிலர் சர்தார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கவுன்சிலர்கள் பிரபாகரன், சரவணன், நிர்வாகிகள் கமாலுதீன், ஆயிரம் விளக்கு கோவிந்தன், திருவல்லிக்கேணி முன்னா செல்வக்குமார், அயன்புரம் செல்வம், முகமதுபாபு, ரமேஷ் உள்பட பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நோன்பு கஞ்சி குடித்தனர்.

நிகழ்ச்சியில் தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் பேசிசும்போது, "கானூரில் நான் தர்கா கட்டி கொடுத்து இருக்கிறேன். நான் எப்போது எல்லாம் அமைதியில்லாமல் இருக்கிறோனோ அப்போதெல்லாம் நான் அந்த தர்க்காவிற்கு சென்று விடுவேன். என் வீட்டு பூஜையறையில் எல்லா மத கடவுள்களின் படமும் இடம் பெற்று உள்ளது. இந்த நிகழ்வில் கலந்து கொள்வதில் உண்மையிலே எனக்கு சந்தோஷமாக இருக்கிறது'' என்றார்.

1 கருத்து:

  1. விஜய் காந்த அவர்களே தாங்கள் கூறும் இந்த நியூஸை பல தலைகள் சொல்லிவிட்டார்கள்

    பதிலளிநீக்கு

LinkWithin

Blog Widget by LinkWithin