வியாழன், 17 செப்டம்பர், 2009

ஸ்டேட் பாங்க் தேர்வு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி

ஸ்டேட் பாங்கில் நாடுமுழுவதும் 11 ஆயிரம் எழுத்தர் பணியிடங்களுக்கான எழுத்துதேர்வுகள், 8-11-09 மற்றும் 15-11-09 ஆகிய நாட்களில் நடக்கிறது.இதற்கான இலவசபயிற்சிவகுப்புகள் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது.

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக வரும் 19ம் தேதி காலை 10 மணிக்கு ஸ்டேட் பாங்க் எழுத்துதேர்வுக்கான இலவச பயிற்சிவகுப்புகள் துவங்குகின்றன. திருச்செந்தூர், உடன்குடி பகுதியை சேர்ந்தவர்கள் இளம் முன்னோடிசங்கம் இணைந்து ஆறுமுகநேரியில் நடத்தும் பயிற்சிவகுப்புகளிலும் விளாத்திகுளம் கோவில்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் விளாத்திகுளம் வேம்பு மக்கள் சக்தி இயக்கத்தில் நடத்தும் பயிற்சியில் கலந்துகொள்ளலாம்.

பயிற்சி வகுப்புகள் வரும் 19 முதல் துவங்கி தேர்வுநாள் வரை அனைத்து சனி,ஞாயிறு விடுமுறை நாட்களில் நடக்கும். இவ்வாறு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin