ஞாயிறு, 13 செப்டம்பர், 2009

நெல்லை பத்திரிக்கையாளர் மன்றம் ந‌ட‌த்திய‌ குழந்தை கடத்தல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி


நெல்லை பத்திரிக்கையாளர் மன்றம் சார்பில் குழந்தை கடத்தல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் உலக திரைப்பட திருவிழா ந‌டைபெற்ற‌து.

நெல்லை பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் இன்று பாளையங்கோட்டையில் நடைபெற்ற குழந்தை கடத்தல் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆஸ்ராகர்க் துவக்கி வைத்தார். பேரணி பாளை தூய சவேரியார் பேராலயம் வழியாக செந்தில்வேல் திரையரங்கம் வந்தடைந்தது இதில் எராள‌மான‌ ப‌ள்ளிக்குழ‌ந்தைக‌ள் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.

பின்னர் அங்கு நடைபெற்ற உலக திரைப்பட விழாவிற்கு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்புத்துரை இணை அமைச்சர் நெப்போலியன் தலைமையேற்றார் சுற்றுச் சூழல் அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் இராமசுப்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நெல்லை பத்திரிக்கையாளர் மன்ற தலைவர் எஸ்.ராமலிங்கம் வர‌வேற்றார். ஒருங்கினைப்பாளர் ஜி.பரமசிவன் விளக்கவுரையளித்தார். மாநகராட்சி மேயர் அ.லெ.சுப்பிரமணியன் சட்டமன்ற உறுப்பினர் என்.மாலைராஜா அருட்தந்தை அந்தோனி குரூஸ் அடிகளார், லேனாகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். பத்திரிக்கையாளர் மன்ற செயலாளர் அந்தோனி சேவியர் நன்றி கூறினார்.

விழாவில் யாதுமாகி திரைப்படக்களம் சார்பில் அமோர்க்கா மற்றும் ஈரான் குர்திஸ் மொழி திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

செல்வா,நெல்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin