திங்கள், 14 செப்டம்பர், 2009

பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் இப்தார் நிகழ்ச்சி

பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந் நிகழ்ச்சியை அக் கல்லூரியும், அமெரிக்க தூதரகமும் இணைந்து நடத்தின.

கல்லூரி தாளாளர் த.இ.செ. பத்ஹூர் ரப்பானி தலைமை வகித்தார்.

கல்லூரி முதல்வர் பேராசிரியர் ஹெச். செய்யது உதுமான், கல்லூரியின் ஆட்சிக் குழுத் தலைவர் பல்லாக் லெப்பை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக அமெரிக்க மையத்தின் கலாசார உறவு அலுவலர் நிக்நம்பா பங்கேற்று பேசினார்.

அமெரிக்கத் தூதரக ஊடகத் திட்ட முதுநிலை இயக்குநர் லாரன் கொலிட்டா, சாரதா கல்லூரித் தாளாளர் சங்கரானந்தா சுவாமி, அருள்தந்தை ஜமீல்ஸ் ஜேம்ஸ் ஆகியோர் பேசினர்.

நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் உபயத்துல்லா, அ. நிகமத்துல்லா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin