வியாழன், 27 அக்டோபர், 2011

ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி தலைவர் பதவியேற்பு


ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி மன்ற புதிய தலைவராக அ.தி.மு.க.வைச் சேர்ந்த பி.அருணாசலம் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் பதவி ஏற்றனர்.

பேரூராட்சி மன்ற பதவியேற்பு விழாவையொட்டி பேரூராட்சி அலுவலகம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதிகாலையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் பகல் 12 மணிக்கு மேல் பதிவியேற்ப்பு விழா தொடங்கியது.

மேளதாளங்களுடன், வாண வேடிக்கைகள் முழங்க முதலில் பேரூராட்சி புதிய தலைவர் பி.அருணாசலத்துக்கு பேரூராட்சி நிர்வாக அதிகாரி மணி பதவி பிரமாணம் செய்துவைத்தார்.

பின்னர் தொடர்ந்து உறுப்பினர்கள் தே.பெருமாள் (1வது வார்டு), ம.ராமலெட்சுமி (2வது வார்டு), செய்யது காதர் பாத்திமா (3 வது வார்டு), மு.பராசக்தி (4 வது வார்டு), கு.பிச்சை (5 வது வார்டு), பி.ரீனா (6 வது வார்டு), க.பாமா (7 வது வார்டு), சு.பால்ராஜ் (8 வது வார்டு), பெ.தங்கவேல் (9 வது வார்டு), எம்.எஸ்.ராஜா (10 வது வார்டு), கா.தாமோதரன் (11 வது வார்டு), கே.பாலம்மாள் (12 வது வார்டு), சு.பெருமாள் (13 வது வார்டு), எஸ்.நிலமுடையான் (14 வது வார்டு), ஆர்.அமுதா (15 வது வார்டு), ஜி.பெரியார்செல்வம் ( 16 வது வார்டு), எம்.பொன்பாண்டி (17 வது வார்டு), மு.மாரிமுத்து (18 வது வார்டு) ஆகியோருக்கு பேரூராட்சி புதிய தலைவர் பி.அருணாசலம் பதவி பிரமாணம் செய்துவைத்தார்.

ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சியில் தலைவர் பதவிக்கு பதவி பிரமாணம் எடுத்துக்கொண்ட புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு கட்சி பிரமுகர்கள், நண்பர்கள், உறவினர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

முடிவில் புதிய தலைவர் பி.அருணாசலம் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள், கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin