செவ்வாய், 4 ஆகஸ்ட், 2009

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் ஸ்டாலின் இன்று பிரசாரம்

துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் தமது இடைத்தேர்தல் பிரசாரத்தை ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் செவ்வாய்க்கிழமை துவங்குகிறார்.

தமிழகத்தில் 5 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஆகஸ்ட் 18-ம் தேதி நடைபெறுகிறது. இத் தொகுதிகளில் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் 10 நாட்கள் பிரசாரம் செய்கிறார்.

அவர் தமது பிரசாரத்தை ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்குட்பட்ட பழையகாயலில் மாலை 5 மணிக்கு துவங்குகிறார்.

தொடர்ந்து முக்காணி, உமரிக்காடு, வாழவல்லான், ஏரல், சிறுதொண்டநல்லூர், சாயர்புரம், பெருங்குளம், சிவகளை, பேட்மாநகரம், பேரூர், திருப்புளியங்குடி ஆகிய இடங்களில் காங். வேட்பாளர் எம்.பி. சுடலையாண்டியை ஆதரித்து வாக்கு சேகரிக்கும் ஸ்டாலின், ஸ்ரீவைகுண்டத்தில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin