செவ்வாய், 4 ஆகஸ்ட், 2009

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 525 ராணுவ ஓட்டுகள்

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 525 ராணுவ ஓட்டுகள் உள்ளன. இவர்களுக்கான தபால் ஓட்டுகள் திங்கள்கிழமை அவர்கள் பணியாற்றும் இடங்களுக்கு அனுப்பப்பட்டன.

இப் பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் இம் மாதம் 18-ம் தேதி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை ஆட்சியர் கோ. பிரகாஷ் தலைமையிலான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

இத் தொகுதியில் ராணுவத்தினர் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் வாக்குகள் 525 உள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிளில் வசித்து வரும் இவர்களுக்கான தபால் வாக்குகள் திங்கள்கிழமை அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டன.

இத் தொகுதியில் உள்ள 172 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு மடிக் கணினி மூலம் வெப் காமிராவில் பதிவு செய்யப்பட்டு, இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக இம் மாதம் 16-ம் தேதி அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வெப் காமிராக்கள் பொருத்தப்பட்டு, சோதனை செய்யப்படவுள்ளன.

இதற்காக அனைத்து வசதிகளையும் பிஎஸ்என்எல் நிறுவனம் இம் மாதம் 8-ம் தேதிக்குள் செய்து முடிப்பதாகத் தெரிவித்துள்ளதாக, தேர்தல் நடத்தும் அலுவலரான துரை. ரவிச்சந்திரன் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin