ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2009

பள்ளிவாசலை பூட்டிய போலீஸ் - கண்டித்து தவ்ஜீத் ஜமாத் ஆர்ப்பாட்டம்

கடையநல்லூர்: ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி வாசலை பூட்டிய போலீசாரை கண்டித்து கடையநல்லூரில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள எஸ்பி பட்டணத்தில் தவ்ஹீத் ஜமாத்திற்கு சொந்தமான பள்ளி வாசல் உள்ளது. இந்த பள்ளி வாசலில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்திக் கொண்டிருந்தபோது அங்கு வந்த போலீசார் அனைவரையும் வெளியே அனுப்பி விட்டு பள்ளிவாசலுக்கு பூட்டு போட்டனர்.

இதனை கண்டித்தும் போலீசார் தவ்ஹீத் ஜமாத்திற்கு எதிராகவும், இஸ்லாமியர்களின் மற்றொரு பிரிவுக்கு சாதகமாக செயல்படுவதாக கூறி ஜமாத் சார்பில் கடையநல்லூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட துணை தலைவர் ஜபரூல்லா தலைமை வகித்தார். மேலாண்மை குழு உறுப்பினர்கள் அப்துல் நாசர், அப்பாஸ் அலி, நகர நிர்வாகிகள் முகமது கோரி, பாவா முன்னிலை வகித்தனர். மாநில மேலாண்மை குழு உறுப்பினர்கள் சைல்புல்லா பேசினார். சுலைமான் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin