புதன், 22 ஜூலை, 2009

தூத்துக்குடி குழந்தைகளை மகிழ்விக்க கிரேட் இந்தியன் சர்க்கஸ்: 24ம் தேதி துவக்கம்

தூத்துக்குடியில் ஆசியாவின் புகழ்பெற்ற சர்க்கஸ் நிறுவனமான கிரேட் இந்தியன் சர்க்கஸ் வருகிற 24ம் தேதி முதல் துவங்குகிறது.
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள, எஸ்.ஏ.வி. பள்ளி மைதானத்தில், ஆசியாவின் புகழ்பெற்ற சர்க்கஸ் நிறுவனமான கிரேட் இந்தியன் சர்க்கஸ் வருகிற 24ம் தேதி முதல் துவங்கி 30 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. பகல் 1மணி, மாலை 4மணி, இரவு 7 மணி என தினந்தோறும் 3காட்சிகள் நடைபெறுகிறது. இதற்காக ரூ.70, ரூ.50, ரூ.30 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

கிரேட் இந்தியன் சர்க்கஸ் நிகழ்ச்சியை வருகிற 24ம் தேதி மாநில சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், துறைமுக சபை பொறுப்பு கழக உறுப்பினர் என்.பெரியசாமி ஆகியோர் துவக்கி வைக்கின்றனர். மாநகர மேயர் கஸ்தூரி தங்கம், வ.உ.சி. கல்லூரியின் தாளர் ஏ.பி.சி.வி.சொக்கலிங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.

கிரேட் இந்தியன் சர்க்கஸ் நிறுவனம் 15 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டதாகவும், இதில் பல்வேறு விலங்குகளும், பறவைகளும் தங்களது திறமைகளை வெளிபடுத்துகிறது. ஜெர்மன் நாய்களின் அற்புத சாகசங்களும், யானைகளின் கிரிக்கெட் விளையாட்டும் முக்கிய அம்சமாக இடம்பெற்றுள்ளது. ரஷ்யா, சீனா மற்றும் கொரியா ஆகிய நாடுகளில் பயிற்சி பெற்ற 200 வல்லுனர்களால் சிறப்பு சாகசங்கள் நிகழ்த்துவதாக இந்நிறுவனத்தின் மேலாளர் சனில் ஜார்ஜ் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin