ஞாயிறு, 28 ஜூன், 2009

மேலப்பாளையத்தில் ரயில் முன்பதிவு மையம்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தல்

மேலப்பாளையத்தில் முழுநேர ரயில் முன்பதிவு மையம் ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து அதன் மேலாண்மை குழு உறுப்பினர் எம்.எஸ். சுலைமான் பிர்தவ்ஸி, மாவட்டத் தலைவர் எஸ். யூசுப் அலி ஆகியோர் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.எஸ். ராமசுப்புவை சந்தித்து அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

தேசிய அளவில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதாக காங்கிரஸ் கட்சி கடந்த 2004 தேர்தலில் வாக்குறுதி அளித்தது. அதுகுறித்து மக்களவையில் முறையிட வேண்டும்.

பாபநாசத்தில் இருந்து திருநெல்வேலிக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

மேலப்பாளையத்தில் முழுநேர கணினி முன்பதிவு மையம் ஏற்படுத்த வேண்டும். நெல்லையில் இருந்து பெங்களூருக்கு தினசரி ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முஸ்லிம்களுக்கு பாஸ்போர்ட் கிடைக்க காவல்துறையினரின் தடையின்மை சான்றுப் பெறுவதில் உள்ள முட்டுக்கட்டைகளை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin