வெள்ளி, 7 ஆகஸ்ட், 2009

ஸ்ரீவை. தொகுதியில் மாட்டுவண்டி தொழிலாளர்கள் பிரசாரம் செய்ய முடிவு

ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவை இடைத் தேர்தலில் பிரசாரம் செய்யப்போவதாக ஜனநாயக இரட்டை மாட்டு வண்டி தொழிலாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அந்த சங்கத்தின் தலைவர் டி. ராஜமாணிக்கம் வெளியிட்ட அறிக்கை: திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பல ஆயிரம் ஏழைத் தொழிலாளர்கள் மாட்டு வண்டியில் மணல் அள்ளி, விற்று தங்களது வாழ்க்கையை ஓட்டி வருகின்றனர்.

இந்நிலையில் செய்துங்கநல்லூர், முறப்பாடு காவல் நிலையங்களில் ஆற்று மணல் அள்ளப்பட்ட மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு, அங்கு சிறைவைக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக அந்த தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அந்த மாட்டு வண்டிகளை விடுவிக்கக் கோரியும், மாட்டு வண்டிகளில் மணல் அள்ள முறையாக அனுமதி வழங்க வலியுறுத்தியும் ஸ்ரீவைகுண்டம் தொகுதி முழுவதும் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin