செவ்வாய், 4 ஆகஸ்ட், 2009

ஆட்டோவில் இன்று ஒரு தகவல்: சென்னை டிரைவர் அசத்தல்


சென்னையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் நடராஜ் தினந்தோறும் மக்களுக்கு தேவையான தகவல்களை தனது ஆட்டோவின் பின்புறம் எழுதி அசத்தி வருகிறார்.

சென்னை திநகரைச் சேர்ந்தவர் நடராஜ். இவர் ஆட்டோ டிரைவராக இருந்து வருகிறார். பொதுமக்களுக்கு பயனுள்ள தகவல்களை தர எண்ணிய அவர், தினமும் ஒரு வாசகத்தினை, தனது ஆட்டோவின் பின்புறம் கருப்பு ரெக்ஸினில் சாக்பீஸ் வைத்து அவரே எழுதி வருகிறார்.

நேற்று, அவர் எழுதிய வாசகம் அனைத்து கல்லூரி மாணவ, மாணவியர்களின் கவனத்தையும் ஈர்த்தது. வங்கிகளில் கல்வி கடனுக்காக அலையும் பெற்றோர்களும் ஆட்டோ டிரைவர் எழுதிய ரிசர்வ் வங்கியின் தொலைபேசி எண்களை குறித்துக் கொண்டனர்.

ஆட்டோக்களில், "போங்கடி நீங்களும் உங்க காதலும்", "இன்று போய் நாளை வா", "என்வழி தனிவழி", ரசிகர் மன்றங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பெயர்களை குறித்துச் செல்லும் ஆட்டோ டிரைவர்களின் மத்தியின் நடராஜின் பொதுச் செய்திகள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக பேசப்படுகிறது.

சக்திவேல், சென்னை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin