சனி, 29 ஆகஸ்ட், 2009

தமிழ்நாட்டில் உலமாக்கள், பணியாளர் நல வாரியம் அமைக்கப்பட்டது

தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் கடந்த 2009, பிப்ரவரி 1-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு உலமாக்கள் - உமராக்கள் மாநாட்டை நடத்தியது.

தமிழகம் முழுவதிலுமிருந்து சங்கைக்குரிய உலமா பெருமக்கள், இமாம்கள், பள்ளிவாசல் தர்ஹா பணியாளர்கள், ஜமாஅத் தலைவர்கள் பல்லாயிரக்கணக்கில் பங்கேற்ற இம்மாநாட்டில் மாண்புமிகு அமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

தமிழ்நாட்டில் உலமாக்கள், பணியாளர் நலவாரியம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இம்மாநாட்டில் பிரதான தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. இக்கோரிக்கை முதல்வர் கலைஞர் அவர்கள் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற உறுதுணையாக இருப்பேன் என அம்மாநாட்டில் உரையாற்றிய மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசு வெளியிட் டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது

2009-2010ம் ஆண்டிற் கான நிதி நிலை அறிக்கை யில் மாநிலத்தில் உள்ள பள்ளிவாசல்கள், தர்காக் கள் மற்றும் மத்ரஸாக் களில் உள்ள உலமாக்கள் மற்றும் பணியாளர்களுக் கென உலமாக்கள் மற்றம் பணியாளர்கள் நல வாரி யம் ஒன்று அமைக்கப்ப டும் என்று அறிவிக்கப்பட் டது.

மேற்காணும் அறிவிப் பின்படி தமிழ்நாட்டி லுள்ள பள்ளிவாசல்கள், தர்காக்கள் மற்றும் மதர ஸாக்களில் உள்ள உலமாக் கள் மற்றும் பணியாளர் களுக்கென உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைத்து அரசு ஆணையிடுகிறது.

இந்நலவாரியத்தில் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் மதர ஸாக்களில் பணிபுரி யும் ஆலிம்கள், பேஷ் இமாம்கள், அரபி ஆசிரி யர்கள்ஃஆசிரியைகள், மோதினார் கள், பிலால்கள் மற்றும் இதர பணியாளர் கள், தர்காக்கள் மற்றும் அடக்கஸ்தலங்கள், தைக் காக்கள், ஆஷ_ர்கானாக் கள் மற்றும் முஸ்லிம் அனாதை இல்லங்கள் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் முஜாவர் உள் ளிட்ட பணியாளர்களை உறுப்பினர்களாகச் சேர்க்க லாம்.

இவ்வாறான நிறுவ னங்களில் பணிபுரியும் 18 வயது நிரம்பிய 60 வயதுக்கு மேற் படாத பணியாளர் கள் பதிவு பெற தகுதியு டையவர்கள் என அரசு ஆணை யிடுகிறது.

உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரி யத்திற்கு சுற்று சூழல் மற்றும் வக்ஃபு அமைச்சர் மைதீன் கான் தலைவராக நியமனம் செய்யப்படுகி றார். இவ்வாரியத்தில் அலு வல் சார்ந்த உறுப்பினர் களாகக் கீழ்க்கண்ட அலு வலர்கள் நியமிக்கப்படு கிறார்கள்.
அரசு சார்ந்த உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறு பான்மை அரசு நலத்துறை செயலாளர், நிதித்துறை முதன்மைச் செயலாளர், வருவாய்த்துறை முதன் மைச் செயலாளர், சமூக நலத்துறை முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர், உயர்கல்வித் துறை முதன்மைச்செயலா ளர், தொழிலாளர் நலத் துறை ஆணையாளர், சிறு பான்மை நலன் ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நலன் ஆணையர், தமிழ் நாடு வக்ஃப் வாரிய முதன்மை செயல் அலுவ லர் ஆகியோர் அரச சார்ந்த உறுப்பினர்களாகவும்.

அலுவல் சாரா உறுப்பினர்களாக கீழ்க்கண்டவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்

தமிழ்நாடு மாநில ஜமா அத்துல் உலமா சபை தலைவரும் லால்பேட்டை மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரி பேராசிரியருமான மௌலவி ஏ.இ.எம். அப்துர் ரஹ்மான்,

மாநில பொதுச் செயலாளரும் மாநில பொருளா ளர் மௌலவிஎஸ்.எம். முஹம்மது தாஹா. மாநில ஜமாஅத்துல் உலமா சபை கௌரவ தலைவரும் வீரசோழன் ஜாமிஆ கைராத்துல் இஸ்லாம் அரபிக் கல்லூரி முதல்வருமான மௌலவி ஓ.எம். அப்துல் காதிர்,

திருநெல்வேலி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவரும் அல்ஹசனாத் துல் ஜாரியா அரபிக் கல்லூரி முதல்வருமான மௌலவி டி.ஜே.எம். சலாஹ{த்தீன்.

வேலூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை செயலாளரும் வாணியம்பாடி மஃதினுல் உலூம் அரபிக்கல்லூரி முதல்வருமான மௌலவி முஹம்மது வலியுல்லாஹ், மாநில துணைப் பொதுச் செயலாளரும் பாபநாசம் ஆர்.டி.பி. காலேஜ் அரபித் துறை பேராசிரியருமான மௌலவி தேங்கை ஷர்புத்தின்.

சென்னை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவரும் மண்ணடி மஸ்ஜிதே மஃமூர் தலைமை இமா மான மௌலவிஓ.எஸ்.எம். முஹம்மது இல்யாஸ், மாநில தகவல் தொடர்பு நிறுவனர் சிதம்பரம் மௌ லவி முஹம்மது இஸ்மா யில் நாஜி, குடியாத்தம் தாருல் உலூம் சயீதிய்யா அரபிக் கல்லூரி நிறுவனர் மௌலவி முஹம்மது அய்ய+ப்,

தூத்துக்குடி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை செயலாள ரும், மன்பவுஸ் ஸலாஹ் அரபிக் கல்லூரி பேராசிரி யருமான மௌலவி எஸ். முஜீபுர் ரஹ்மான்.

தமிழ்நாடு பிலால்கள் சங்கம் தலைவர் ஏ. முஹம்மது ய+னுஸ், தமிழ் நாடு இஸ்லாமிய ஆலயப் பணி உடல் உழைப்பு பிலால்கள் நல சங்கம் மாநில பொதுச் செயலா ளர் முஹம்மது அலி பேக்.

தமிழ் மாநில இமாம்கள் பேரவை மௌலவி எம்.ஜி. ஷிஹாபுத்தீன், சென்னை மந்தைவெளி தலைமை இமாம் மௌலவி ஜி.கே. முஹம்மது இல்யாஸ் ரியாஜி ஆகியோர் உறுப்பி னர்களாக நியமிக்கப்படுகின்றனர்.

உலமாக்கள் மற்றும் இதர பணியாளர்களின் சமூக, கல்வி மற்றும் பொரு ளாதார மேம்பாட்டிற் கான அரசு செயற்படுத்தும் பல்வேறு திட்டங்களின் செயலாக்கத்தை கண் காணித்து இப்பிரிவினரின் மேம்பாட்டினை உறுதி செய்ய தக்க ஆலோசனை களை இவ்வாரியம் அரசுக்கு வழங்கும்.

உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரி யத்தில் உறுப்பினர்களைச் சேர்த்து வாரிய உறுப்பினர் களுக்கு அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு நல உதவிகளும் வழங்கப்பட வேண்டும் என்று முடிவுச் செய்து உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர் கள் சேர்க்கை மற்றும் உதவி தொகைகள் வழங்கு வதற்கான வழி முறைகள் குறித்து அரசு கீழ்க்கண்ட வாறு ஆணையிடகிறது.

அமைப்பு சாரா தொழி லாளர் நல வாரியத்தில் பதிவு செய்தள்ள உறுப்பி னர்களுக்கு வழங்கப்படும் கீழ்க்கண்ட பல்வேறு நல உதவிகள் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர் களாக பதிவு செய்த கொள் பவர்களுக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும் வழங் கப்படும்:

விபத்து ஈட்டுறுதி திட்டம் விபத்தினால் மரணம் ஏற்பட்டால் ரூ. 1லட்சம் உதவித் தொகை.
விபத்தினால் ஊனம் ஏற்பட்டால் ஊனத்தின் தன்மைக்கேற்ப ரூ.10ஆயி ரம் முதல் ரூ.1லட்சம் வரை. இயற்கை மரணத்திற் குள்ளானவர் குடும்பத் திற்கு உதவித் தொகை ரூ. 15ஆயிரம்.

கல்வி உதவித் தொகை 10-ம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தைக்கு ஆயிரம் ரூபாய்,
10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்க ளுக்கு ஆயிரம் ரூபாய், 11-ம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தைக்கு ஆயிரம் ரூபாய், 12-ம் வகுப்பு படித்து வரும் பெண் குழந் தைக்கு ரூ.1,500 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு ரூ.1,500, முறையான பட்டப் படிப்புக்கு ரூ.1,500, மாணவர் இல்ல வசதியு டன் முறையான பட்டப் படிப்புக்கு ரூ.1,750, முறை யான பட்ட மேற்படிப் புக்கு ரூ.2 ஆயிரம், மாண வர் இல்ல வசதியுடன் முறையான பட்ட மேற்ப டிப்புக்கு ரூ. 3 ஆயிரம்.

தொழிற்கல்வி பட்டப் படிப்புக்கு ரூ. 2ஆயிரம், மாணவர் இல்ல வசதியு டன் தொழிற் கல்வி பட் டப்படிப்புக்கு ரூ.4 ஆயிரம், தொழிற் கல்வி மேற்படிப் புக்கு ரூ.4 ஆயிரம், மாண வர் இல்ல வசதியுடன் தொழிற் கல்வி பட்ட மேற்படிப்பு ரூ. 6 ஆயிரம், ஐ.டி.ஐ. அல்லது தொழிற் பயிற்சி படிப்புக்கு ரூ.1,000, மாணவர் இல்ல வசதியு டன் ஐ.டி.ஐ. அல்லது பல் தொழில் பயிற்சி படிப்புக்கு 1,200, திருமண உதவித் தொகை ரூ.2ஆயிரம்.

மருத்துவ உதவித் தொகை மகப்பேறு மாதம் ஒன்றுக்கு ரூ.1000 வீதம் மொத்தம் 6000 ரூபாய், கருச்சிதைவு, கருக்கலைப்பு ரூ.3000, மூக்குக் கண்ணாடி செலவுத் தொகையை முதியோர் ஓய்வ+தியம் மாதந்தோறும் ரூ.400.

உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தின் உறுப்பினர்-செயலராக தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் முதன் மைச் செயல் அலுவலர் நியமனம் செய்யப்படுகி றார்.

18வயது முடிவடைந்த, அனால் 60 வயது முடி வடையாத ஒவ்வொரு வரும் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய தகுதி பெற்ற வராவார். தற்போது நடை முறையில் உள்ள உலமா ஓய்வ+தியத் திட்டத்தின் கீழ் ஓய்வ+தியம் பெறுபவர் களுக்கு இந் நலவாரியத் தில் முதியோர் ஓய்வ+தியம் வழங்கப்படக் கூடாது.

உறுப்பினர் பதவிக்குரிய விண்ணப்பங்களை தகுதி வாய்ந்த நபருக்கு வழங்கி அவர்களிடமிருந்து பெறப் பட்ட உறுப்பினர் சேர்க்கைவிண்ணப்பங் களைத் தொகுத்து, உறுப் பினர்களுக்கு அடையாள அட்டைகளை வக்ஃபு காண்காணிப்பாளர்கள்ஃவக்ஃபு ஆய்வாளர்களின் உதவியுடன் மாவட்ட பிற் படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின லந அலவலர் வாங்குவார். நிதி உதவி வழங்கக் கோரும் விண்ணப்பங்களை ஆய்வு செய்து தகுதியான உறுப் பினர்களுக்கு நல உதவி களை மாவட்ட பிற்படுத் தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மூலம் வழங்கப் படும்.

வாரிய உறுப்பினர் சேர்க்கைக்குரிய விண் ணப்ப படிவம், வாரியத் தின் விதிமுறைகள், வாரி யத்தின் இதர செயல்பாடு கள் முதலிய அனைத்திற் கும் தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தின் மூலம் நடைமுறைப்படுத் தப்படும் இதர அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் பின்பற்றப் படும் அனைத்து நடை முறைகளும் மேற்கொள் ளப்படும்.
பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கு வதற்கு மாவட்ட நிர்வாகத்திற்கு தேவையான நிதி உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரி யத்தின் நிதியிலிருந்து வழங் கப்படும்.
மேற்காணும் நிதி உதவி கள் யாவும் தகுதியான நபர் களுக்கு மட்டுமே அளிக் கப்படும்.

அரசுஃஅரசு சார்ந்த மற்றும் அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிந்து அந்நிறவனங் களில் வழங்கப்படும் அனைத்து சலுகைகளை யும் பெறும் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் இத்திட்டங்களின் கீழ் பயன்களை பெற இயலாது. வேறு நல வாரியங்களில் உறுப்பினராக உள்ள உல மாக்கள் மற்றும் பணியா ளர்கள் ஏதேனும் ஒரு நல வாரியத்தின் மூலம் மட்டும் தான் நலத்திட்ட உதவி களைப் பெற தகுதியுடைய வர் ஆவார்.

மேற்குறிப்பிட்டுள்ள பணிகள் மாவட்டங்களில் சிராக நடைபெறுவதைக் கண்காணிக்கவும் ஆய்வு செய்யவும் மாநில அளவில் உலமாக்கள் மற்றும் பணி யாளர்கள் நல வாரியத் திற்கு அதிகாரம் அளித்து அணையிடப்படுகிறது. சேர்க்கப்பட்ட உறுப் பினர்களின் எண்ணிக்கை, அடையாள அட்டை வழங்கப்பட்ட குடும்பங் களின் எண்ணிக்கை, நல உதவிகள் இனம் வாரியாக வழங்கப்பட்ட எண் ணிக்கை மற்றும் தொகை, மொத்த பயனாளிகளின் எண்ணிக்கை மற்றும் தொகை போன்ற விவரங் கள் அடங்கிய அறிக்கை யினை பதினைந்து நாட் களுக்கு ஒரு முறை அர சுக்கு அனுப்பி வைக்குமறு வாரியத்தின் உறுப்பினர்-செயலர் கேட்டுக் கொள் ளப்படுகிறார்.

புதியதாகத் தோற்றுவிக் கப்படும் இந்நலவாரியத் தில் உலமாக்கள் மற்றும் பணியாளர்களின் நலனுக் காக செயல்படுத்தப்படும் திட்டங்களின் அமலாக் கத்தைக் கண்காணிக்கவும், மேலும் புதிய திட்டங்கள் அமுல் படுத்தப்படுவது குறித்து அரசுக்கு ஆலோ சனைகள் வழங்கவும், மற்றும் இக்குழுவினை முதல் நிலைக் குழுவாகவும் (தினப்படிஃபயணப்படி பெறுவதற்கு), இதன் பதவிக் காலம் 3 ஆண்டுகள் என நிர்ணயித்து, அரசு ஆணை வெளியிடுகிறது.
மேற்குறிப்பிட்டவாறு நல உதவிகள் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்யப் படும்.

உறுப்பினர்களுக்கு வழங்குவதற்காகவும், இதுதொடர்பான பிற பணி களை மேற்கொள்வதற்கா கவும் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரி யத்திற்கு ரூ. 10 லவட்ம் நிதி ஒப்பளிப்பு செய்து அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள் ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin