
முதல் கட்டமாக தமிழகத்தில் 30 வைமேக்ஸ் நிலையங்களை நிறுவுகிறது பிஎஸ்என்எல். ஒவ்வொரு நிலையமும் 15 கிமீ சுற்றளவுக்குள் சேவைகளை வழங்கும். இவற்றில் 22 நிலையங்கள் கிராமப் புறங்களை மையப்படுத்தி அமையவிருப்பதாக பிஎஸ்என்எல் பொது மேலாளர் ஆர் கணேசன் தெரிவித்தார்.
வைமேக்ஸ் நிலையம் அமைப்பதற்கான உபகரணங்கள் ஆகஸ்டுக்குள் தமிழகத்துக்கு வந்துவிடும் என்றும், அக்டோபர் மற்றும் நவம்பர் முதல் சேவை ஆரம்பமாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது கட்டமாக 300 வைமேக்ஸ் நிலையங்களை அமைக்க பிஎஸ்என்எல் முடிவு செய்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக