வெள்ளி, 24 ஜூலை, 2009

காயல்பட்டினத்தில் நாளை "புகாரிஷ் ஷரீபு"

காயல்பட்டினத்தில் நாளை சனிக்கிழமை (ஜூலை 25) புகாரிஷ் ஷரீபு நடைபெறுகிறது.

இங்கு மஜ்லிஸþல் புகாரிஷ் ஷரீபு 82-ம் ஆண்டு தொடக்க விழா கடந்த மாதம் 25-ம் தேதி தொடங்கியது. இம் மாதம் 26-ம் தேதி வரை இவ் விழா நடைபெறுகிறது.

நபிகள் நாயகம் மணிமொழிக் கோர்வையான அல்ஜாமிஉல் ஸஹீஹூல் எனும் பரிசுத்த கிரந்தம் 81 ஆண்டுகள் வாசித்ததுபோல இவ்வாண்டும் விழாவையொட்டி தினமும் அதிகாலை 5.30-க்கு தொடங்கி 9 மணி வரை வாசிக்கப்படுகிறது.

திங்கள், செவ்வாய்கிழமை புனித மிராஜ் தினமும், புதன்கிழமை புகாரி இமாம் நினைவு தினமும் கடைப்பிடிக்கப்பட்டன.

வியாழக்கிழமை புனிதர் புகாரி இமாம் ரழியல்லாஹூ அன்ஹூ மீது மெüலானா மெüலவி மர்ஹூம் அல்லாமா அல்ஹாபிழ் நஹ்வி முகம்மது இஸ்மாயினால் முப்தி ரஹ்மதுல்லாஹியால் தொகுக்கப்பட்ட மெüலீது ஷரீபு ஓதப்பட்டது.

இதையடுத்து வெள்ளிக்கிழமை (ஜூலை 24) புகாரி ஓதி ஹதீது நிகழ்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

நிறைவு நாள் நிகழ்ச்சிகள் சனிக்கிழமை நடைபெறுகின்றன. காலை 10.30-க்கு உலக அமைதி வேண்டியும், மழை வளம், தேசிய ஒற்றுமை உள்ளிட்டவை வேண்டி "அபூர்வ துஆ' எனும் சிறப்பு பிரார்த்தனை நடைபெறுகிறது.

புனித மக்கா ஷரீபு முப்தி இமாம் மெüலானா செய்யது அஹ்மதிப்னு ஜெய்னி தஹ்லானி ரழியல்லாஹூ அன்ஹூவால் தொகுக்கப்பட்ட இப் பிரார்த்தனை ஓதப்படும்.

இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்பர்.

தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) நேர்ச்சை விநியோகம் நடைபெறும். ஏற்பாடுகளை விழா கமிட்டியை சேர்ந்த எம்.கே. செய்யிது முஹம்மது, கே.எஸ். கிதுறு முஹம்மது, எம்.ஜே. செய்யிது இப்ராஹிம் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin