வியாழன், 23 ஜூலை, 2009

குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதுகிறது


குற்றாலத்தில் தற்போது சீசன் களை கட்டி காணப்படுகிறது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுகிறது.

இதனால் குற்றாலத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் அனைத்து அருவிகளுக்கும் சென்று ஆனந்த குளியல் போடுகின்றனர்.

சுற்றுலா பயணிகளின் வருகையை தொடர்ந்து அங்கு வியாபாரமும் சூடு பிடித்துள்ளது. இதனால் வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஐந்தருவி அருகே உள்ள படகு குழாமிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதி காணப்படுகிறது.

அருவிகளில் கூட்ட நெரிசலை தடுப்பதற்காக சுற்றுலா பயணிகள் அனைவரும் வரிசையாக நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வருவதால் குற்றாலத்தில் வாகன நெருக்கடி அடிக்கடி ஏற்படுகிறது. அதை போலீசார் சமாளித்து வருகின்றனர். தீவிர பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே வருகிற 25-ந்தேதி குற்றாலத்தில் சாரல் விழா நிகழ்ச்சி நடக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin