வெள்ளி, 24 ஜூலை, 2009

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையின் செயற்கைக் கோள் நூலகம் திறப்பு

நெல்லை: இந்தியாவிலேயே முதல் முறையாக, நெல்லை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்தில் செயற்கோள் நூலக மையத்தை துணை வேந்தர் சபாபதி மோகன் திறந்து வைத்தார்.

சிங்கப்பூர் ஆசிய ஊடக தகவல் மற்றும் தொடர்பியல் மையத்தின் (Asian Media Information and Communication Centre (AMIC) கிளைப் பிரிவு நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழக தொடர்பியல் துறையில் அமைக்கப்பட்டுள்ளது.

இதை பல்கலைகழக துணை வேந்தர் ரா.சபாபதி மோகன் திறந்து வைத்தார்.

'அமிக்' மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக தொடர்பியல் துறைக்கும் இடையேயான புரிந்துணர்வு ஓப்பந்தத்தின் விளைவாக இந்த செயற்கை கோள் நூலக மையம் அமைக்கப்பட்டுள்ளது.

பல்கலைகழக பதிவாளர் மணிக்குமார், தொடர்பியல் துறை தலைவர் பெ.கோவிந்தராஜூ, மற்றும் தொடர்பியல் துறை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

திறப்பு விழாவை முன்னிட்டு 130 புத்தகங்கள், 'அமிக்'கின் அனைத்து பதிப்பு நகல்களும் மையத்திற்கு இலவசமாக வழங்கப்பட்டது. நெல்லையில் உள்ள இந்த மையத்தின் முலம் 'அமிக்'கின் ஆய்வு இதழ்கள், புத்தகங்கள் மற்றும் அனைத்து பதிப்புகலை தொடர்பியல் ஆய்வாளர்கள், மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

உலகிலேயே 2வது மற்றும் இந்தியாவிலேயே முதல் செயற்கை கோள் நூலக மையம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin