வெள்ளி, 24 ஜூலை, 2009

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 2-ம் நாளிலும் வேட்புமனு தாக்கல் இல்லை

ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கு 2-வது நாளாக வியாழக்கிழமையும் யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை.

ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் புதன்கிழமை (ஜூலை 22) துவங்கியது. முதல்நாளில் யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை. 4 பேர் மட்டும் வேட்புமனு படிவங்களை வாங்கிச் சென்றனர்.

இந்நிலையில், 2-ம் நாளான வியாழக்கிழமையும் மாலை 3 மணி வரை யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை. மேலும் 5 பேர் வேட்புமனு படிவங்களை வாங்கிச் சென்றுள்ளனர்.

இடைத்தேர்தல் என்றால் எப்போதும் விறுவிறுப்பாக இருக்கும். ஆனால், இம்முறை அதிமுக போட்டியிடவில்லை என்பதால் மந்தமான சூழ்நிலை காணப்படுகிறது. இது வேட்புமனுத் தாக்கலிலும் பிரதிபலித்தது.

காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட சில கட்சிகள் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இக் கட்சிகள் சார்பில் வேட்பாளர் பெயர் வெளியிடப்பட்ட பின்னரே அவர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்வார்கள். எனவே, திங்கள்கிழமைக்கு பின்னரே ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு வேட்புமனுத் தாக்கல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin