வெள்ளி, 31 ஜூலை, 2009

ஸ்ரீவை இடைத்தேர்தல்: பிரச்சார களத்தில் இறங்கிய கம்யூனிஸ்ட் வேட்பாளர்


ஸ்ரீவைகுண்டம் இடைத் தேர்தல் அடுத்த மாதம் 18ம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் இன்று பரிசீலிக்கப்பட்டு அரசியல் கட்சிகள் தங்களது பிரச்சார யுக்தியை கையாளத் துவங்கியுள்ளனர். கம்யூனிஸ்ட் வேட்பாளர் தனலட்சுமி முக்கிய வி.ஐ.பி.களின் சந்திப்புடன் இடைதேர்தல் பிரச்சாரத்தை துவக்கியுள்ளார்

நேற்று காலை தனலட்சுமி, தூத்துக்குடி-நாசரேத் டயோசீசன் பேராயர் ஜெபச் சந்திரனிடம் ஆசிபெற்றார். அதனைத் தொடர்ந்து ஆறுமுகநேரி, ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கேட்கிறார். பெண் வேட்பாளர் என்ற முறையில் தனலட்சுமி போட்டியிடுவதால் ஓட்டுக்கள் கிடைக்க வாய்புள்ளதாக மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin