வெள்ளி, 31 ஜூலை, 2009

நான்குமுனை போட்டி ஸ்ரீவைகுண்டம் தொகுதி சூடுபிடிக்கும் தேர்தல் களம் !

ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் முடிவடைந்ததைத் தொடர்ந்து, ஆதரவு திரட்டும் பணியில் வேட்பாளர்கள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

முக்கிய தலைவர்கள் அடுத்த வாரம் பிரசாரம் செய்ய இருப்பதால், தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

நான்குமுனை போட்டி:

ஸ்ரீவைகுண்டம் தொகுதியைப் பொருத்தவரை நான்குமுனை போட்டி ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் எம்.பி. சுடலையாண்டி, இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஞா. தனலட்சுமி, பா.ஜ.க. வேட்பாளர் அ. சந்தனகுமார், தே.மு.தி.க. வேட்பாளர் மா. செüந்திரபாண்டியன் ஆகிய 4 பேருக்கும் இடையே போட்டி நிலவுகிறது

தலைவர்கள் வருகை:

இந்நிலையில் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் அடுத்த வாரம் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் பிரசாரம் செய்யவுள்ளனர்.

தி.மு.க. தென்மண்டல அமைப்புச் செயலரும், மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீவைகுண்டத்திற்கு வருகிறார்.

அவரது தலைமையில் தி.மு.க. கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

தொடர்ந்து துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகஸ்ட் 4, 5 ஆகிய தேதிகளில் பிரசாரம் செய்யவுள்ளார்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆகஸ்ட் 7, 8 ஆகிய தேதிகளில் பிரசாரம் செய்கிறார்.

மேலும், கம்யூனிஸ்ட், பா.ஜ.க. தலைவர்களும் பிரசாரம் செய்யவுள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin