வியாழன், 23 ஜூலை, 2009

நேற்று முதல் நாளில் யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை

ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் புதன்கிழமை தொடங்கியது. முதல் நாளில் யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை

தேர்தல் அறிவிக்கை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து வேட்புமனுத் தாக்கலும் புதன்கிழமை முற்பகல் 11 மணிக்கு தொடங்கியது. தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் நாளான புதன்கிழமை பிற்பகல் 3 மணிவரை யாரும் மனுத் தாக்கல் செய்யவில்லை. 4 பேர் மட்டும் வேட்புமனு படிவங்களை வாங்கிச் சென்றனர். அடுத்த வாரம் திங்கள்கிழமைக்குப் பிறகுதான் கட்சியினர் வேட்புமனுத் தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin