புதன், 29 ஜூலை, 2009

தமுமுக ஆர்ப்பாட்டம்

கடந்த 3 ஆண்டுகளாக புதுவையில் வக்ஃபு வாரியத் தலைவர் நியமிக்கப்படாததை கண்டித்து தமுமுகவினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இஸ்லாமியர்களுக்கு தனி இடஒதுக்கீடு ஆணையம் அமைக்க வேண்டும்; லிபரான் கமிஷன் அறிக்கையை நாடாளுமன்ற நடப்புக் கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்ய வேண்டும்; ஓரினச் சேர்க்கையை தடை செய்ய வேண்டும்.

புதுவை வக்ஃபு வாரியத்குக்கு உடனடியாக தலைவரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரை தமுமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் அப்துல்ரஹீம் தலைமை வகித்தார். மாநில உலமா அணி செயலாளர் முகம்மது யூசுப் பைஜி கண்டன உரையாற்றினார்.

மாவட்ட நிர்வாகிகள், மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin