புதன், 29 ஜூலை, 2009

ஸ்ரீவைகுண்டம் காங். வேட்பாளர் தங்கபாலு ஆதரவாளர்

ஸ்ரீவைகுண்டம் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ. தங்கபாலுவின் தீவிர ஆதரவாளரான எம்.பி. சுடலையாண்டி (42) போட்டியிடுகிறார்.

இடைத்தேர்தல் நடைபெறும் ஸ்ரீவைகுண்டம் தொகுதி, திமுக கூட்டணியில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இத் தொகுதியில் ஜி.கே. வாசன் ஆதரவாளருக்கே சீட் கிடைக்கும் என்றும், மறைந்த எம்.எல்.ஏ. செல்வராஜின் மனைவி நளினி அல்லது தூத்துக்குடி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் எஸ்.டி.ஆர். விஜயசீலன் ஆகிய இருவரில் ஒருவருக்கு சீட் வழங்கப்படலாம் என்றும் பேசப்பட்டது.

இந்நிலையில், இத் தொகுதியில் கே.வீ. தங்கபாலுவின் தீவிர ஆதரவாளரான எம்.பி. சுடலையாண்டிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

அவரைப் பற்றிய விவரங்கள்:

சொந்த ஊர்: தூத்துக்குடி மட்டக்கடை.

பிறந்த தேதி: 13.8.1967.

மனைவி: வேணி.

மகள்கள்: கிருஷ்ணதேவி, ஆனந்ததேவி.

மகன்: பாலகிருஷ்ணன்.

கல்வித் தகுதி: எம்.ஏ. பி.எல்.,

தொழில்: வழக்கறிஞர்.

அரசியல் பின்னணி: 25 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்து வருகிறார்.

தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினராக இருக்கிறார். இதற்கு முன்னர் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் பதவி வகித்துள்ளார். 1996- 2001-ல் தூத்துக்குடி நகர்மன்ற உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin