வியாழன், 30 ஜூலை, 2009

ஸ்ரீவைகுண்டத்தில் இரு கோயில்களில் பூட்டை உடைத்து திருட்டு

ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள 2 கோயில்களில் பூட்டை உடைத்து திருடியவர்களை போலீஸôர் தேடிவருகின்றனர்.

கீழபுதுக்குடியில் உள்ள பத்ரகாளியம்மன் கோயில், வீரபுத்திரசாமி உள்ளிட்ட 2 கோயில்களில் பூட்டை உடைத்து சுவாமி சிலைகளுக்கு அணிவிக்கப்படும் வெள்ளி நகைகள், 13 கிராம் தங்கத் தாலிகள் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடியுள்ளனர். இவற்றின் மதிப்பு ரூ. 25 ஆயிரம்.

புகாரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் நடராஜன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

நகைகளை திருடிய மர்ம நபர்களை போலீஸôர் தேடி வருகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin