
ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக தூத்துக்குடியைச் சேர்ந்த எம்.பி.சுடலையாண்டியை மாநில காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில், தூத்துக்குடி மட்டக்கடை பகுதியைச் சேர்ந்த எம்.பி.சுடலையாண்டி என்பரை அக்கட்சியின் மாநிலத் தலைவர் தங்கபாலு அறிவித்துள்ளார்.
சுடலையாண்டி காங்கிரஸ் கட்சியின் மாவட்ட விவசாய சங்கத் தலைவராகவும், மாவட்ட காங்கிரஸ் துணை தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இவர் தற்போது காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினராக உள்ளார். 42 வயதாகும் சுடலையாண்டிக்கு வேலம்மாள் என்ற மனைவியும், கிருஷ்ண தேவி, ஆனந்த தேவி என இரண்டு மகள்களும், பாலகிருஷ்ணன் என்ற மகனும் உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக