செவ்வாய், 28 ஜூலை, 2009

"மனிதநேய மக்கள் கட்சி இடைத்தேர்தலில் போட்டியிடாது'

இடைத்தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று மனிதநேய மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது.

இளையான்குடி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுமாறு இடதுசாரி கட்சிகள் அழைப்பு விடுத்திருந்த நிலையில், அதுபற்றி திங்கள்கிழமை, உயர்நிலைக் குழு கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்படும் என இக் கட்சி அறிவித்திருந்தது.

திங்கள்கிழமை கூட்டத்தில் இதுபற்றி விவாதிக்கப்பட்டது. 2011 தேர்தலை கருத்தில் கொண்டு கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், இந்தத் தேர்தலில் போட்டியிடுவது இல்லை என முடிவு செய்யப்பட்டதாக அதன் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது தெரிவித்துள்ளார்.

இடதுசாரிகள் நிலை: இதையடுத்து இளையான்குடியில் தாங்கள் போட்டியிடுவதா அல்லது யாரும் போட்டியிடாமல் விட்டுவிடுவதா என்பது பற்றி மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் மூத்த தலைவர்கள் சென்னையில் செவ்வாய்க்கிழமை கலந்து பேசி முடிவு எடுக்க உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin