செவ்வாய், 28 ஜூலை, 2009

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் ஒரே நாளில் 4 சுயேச்சைகள் வேட்புமனு

ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட திங்கள்கிழமை 4 சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், தெய்வசெயல்புரம் அருகேயுள்ள எல்லைநாயக்கன்பட்டியை சேர்ந்த முருகன் மகன் ராமசுப்பிரமணியன் (29) காலையில் முதல் நபராக வேட்புமனு தாக்கல் செய்தார். எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்துள்ள இவர், விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

தூத்துக்குடி மாவட்டம், அகரத்தை சேர்ந்த சிதம்பரம் மகன் மருதநாயகம் (47) வேட்புமனு தாக்கல் செய்தார். எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்துள்ள இவரும், விவசாயம் செய்து வருகிறார். இவர் மனைவி ஜெயா பொன்னம்மாள். இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

தேர்தலில் 41-வது முறையாக போட்டியிடும் நாகர்கோவிலை சேர்ந்த உ. நாகூர் மீரான் பீர்முகமது (48) வேட்புமனு தாக்கல் செய்தார்.

4-வது நபராக அகில இந்திய கைவினைஞர் முன்னேற்றக் கழகத்தின் திருநெல்வேலி மாவட்டச் செயலர் ஆறுமுகராஜ் (31) வேட்புமனு தாக்கல் செய்தார்.

திருநெல்வேலி நகரம் புகழேந்தி தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகனான ஆறுமுகராஜ், வழக்கறிஞராக உள்ளார்.

இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் இதுவரை 5 சுயேச்சைகள் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு தாக்கல் புதன்கிழமையுடன் முடிவடைகிறது. அடுத்த இரு நாள்களில் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin