திங்கள், 27 ஜூலை, 2009

ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலயத் திருவிழா

ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலயத் திருவிழா 10 நாள்கள் நடைபெற்றது.

இத் திருவிழா கடந்த 16-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாக் காலங்களில் தினமும் காலையும், மாலையும் திருயாத்திரை, திருப்பலி, நற்கருணை ஆசீர் நடைபெற்றது. 10-ம் திருவிழாவான சனிக்கிழமை திருப்பலி தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மைக் குரு ஆஸ்வால்ட் தலைமையில் நடைபெற்றது.

பின்னர் மாதா தேர்ப் பவனியும், புனித சந்தியாகப்பர் சப்பரப் பவனியும் நடைபெற்றன.

திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜெயகர் தலைமையில் திருவிழா கமிட்டி நிர்வாகிகள் செய்தனர். திருவிழா நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை காலை திருப்பலி, கொடியிறக்கம் ஆகியன நடைபெற்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin