திங்கள், 27 ஜூலை, 2009

நெல்லையில் ஜூலை 29- ல் தவ்ஹீத் ஜமாஅத் முற்றுகை

திருநெல்வேலியில் இம் மாதம் 29- ம் தேதி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளதாக அந்த அமைப்பின் மாவட்டச் செயலர் கே.ஏ.ஓ. சாதிக் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

உத்தரபிரதேசம் மாநிலத்தில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட

வழக்கில், 23 கோப்புகள் காணாமல் போய்விட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக உத்தரபிரதேசம் உயர்நீதிமன்றம், சி.பி.ஐ.

விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள நபர்களை கண்டுபிடித்து கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும்.

இதேபோல, இச் சம்பத்துக்கு துணைபோன அரசு அதிகாரிகளும் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இக் கோரிக்கைகளை வலியுறுத்தி இம் மாதம் 29-ம் தேதி திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளோம்.

இப் போராட்டத்துக்கு அமைப்பின் மாநில மேலாண்மைக் குழுத் தலைவர் எம். ஷம்சுல்லுஹா ரஹ்மானி தலைமை வகிப்பார்.

மேலும், அமைப்பின் பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என்றார் சாதிக்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin