சனி, 25 ஜூலை, 2009

ஸ்ரீவைகுண்டம் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் அறிவிப்பு


ஸ்ரீவைகுண்டம் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக தூத்துக்குடியைச் சேர்ந்த தனலட்சுமியை அக்கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக் குழு தலைவர் நல்லகன்னு நியமித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் வருகிற 18ம் தேதி இடை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக, மதிமுக, பாமக உள்ளிட்ட கூட்டனிக் கட்சிகள் புறக்கனித்துள்ளது. அதிமுக கூட்டனியில் இருந்துவந்த கம்யூனிஸ்ட் கட்சியினர் இடைத் தேர்தலில் அதிமுகவின் தேர்தல் புறக்கனிப்பை ஏற்க மறுத்து தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம், பர்கூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுவது என முடிவெடுத்து, இன்று கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் தா.பாண்டியன், தேசிய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் நல்லகன்னு ஆகியோர் ஸ்ரீவைகுண்டம் தொகுதி வேட்பாளராக இந்திய தேசிய மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளரான தனலட்சுமி என்பவரை நிறுத்தியுள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin