சனி, 25 ஜூலை, 2009

காயல்பட்டினத்தை பரபரபாக்கிய முதியவர்

காயல்பட்டினத்தில் முகாமிட்டு பொதுமக்களை வேலை வாங்கிய முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது.

காயல்பட்டினம் பெரிய முத்துவாப்பா தைக்கா அருகில் சில தினங்களுக்கு முன்பு முதியவர் ஒருவர் முகாமிட்டிருந்தார்.

புகாரிஷ் ஷரீபு சபையின் அபூர்வ து ஆ நிகழ்ச்சிக்கு வருகை தந்ததாக கூறிய முதியவர் வருவோர் போவோரிடம் இளநீர், பதனீர் மற்றும் சாதம் என உரிமையுடன் கேட்டு வாங்கினார்.

அவரிடம் அவர்களது மூதாதையரை விசாரித்து தெரிந்துக் கொண்டார். நாளுக்குநாள் அவரால் அப்பகுதியில் சிரமம் ஏற்படவே அவரை அப்புறப்படுத்த இளைஞர்கள் எண்ணினர்.

சிலர் அவர் உருவத்தை வைத்து, அஞ்சலகத்தில் ரூ.13 லட்சம் பணம் முதலீடு செய்த எர்ணாகுளம் அருகேயுள்ள மாவூர்பள்ளியில் போலீஸôரால் பிடித்து விசாரிக்கப்பட்ட பணக்கார பிச்சைக்காரார் இவர்தான் எனக் கூறியதால் அவரைப் பார்க்கக் கூட்டம் கூடியது.

யானைக்கால் நோயால் அவதிப்பட்டு கொண்டிருந்த அவரை அப்பகுதி இளைஞர்கள் நைஸôக அவ்விடத்தை விட்டு அப்புறப்படுத்தினர். இருப்பினும், அவர் காயல்பட்டினத்தில் தான் முகாமிட்டுள்ளார் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin