
தெஹ்ரான்: ஈரானில் அவசரமாகத் தரையிறங்கிய விமானம் ரன் வேயிலிருந்து விலகி ஓடி சுவற்றில் மோதி உடைந்தது. இதில் விமானிகள் உள்பட 16 பேர் பலியாயினர்.
ஈரானில் 10 நாட்களுக்குள் நடந்த இரண்டாவது விமான விபத்து இதுவாகும். கடந்த 15ம் தேதி நடந்த விபத்தில் 168 பேர் பலியான நிலையில் நேற்று இநத விபத்து நடந்துள்ளது.
ஏரியா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த விமானம் தலைநகர் தெஹ்ரானில் இருந்த 153 பயணிகளுடன் கிழக்கு ஈரானில் உள்ள மஷ்ஷத் நகருக்கு சென்றது.
மஷ்ஷத் நகரை அடைந்தபோது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானத்தை அவசரமாக தரையிறக்கினர் விமானிகள்.
விமானம் கட்டுப்பாடில்லாமல் அதிவேகத்தில் தரையிறங்கியதில் ரன்வேயிலிருந்து வெளியே குதித்து தறிகெட்டு ஓடியது. பின்னர் விமான நிலையத்தின் வெளிப்புற சுவரில் மோதி முன் பகுதி நொறுங்கிவிட்டது. அப்போது விமானத்தில் தீயும் பிடித்துக் கொண்டது.
இதில் விமானத்தின் முன் பகுதி முழுவதுமாக சிதைந்துபோனது. இதில் விமானிகள் இருவரும் முன் பகுதியில் அமர்ந்திருந்த 16 பயணிகளும் பலியாகிவிட்டனர்.
ரஷ்ய தயாரிப்பான இந்த விமானம் இல்யுசின்-62 எம் ரக விமானமாகும்.
கடந்த 15ம் தேதி ஈரானின் காஸ்பியன் ஏர்லைன்சுக்கு சொந்தமான ரஷ்ய தயாரிப்பான டுபலோவ் ரக விமானம் தரையில் மோதி வெடித்து சிதறியதில் 168 பேர் பலியானது நினைவுகூறத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக