சனி, 25 ஜூலை, 2009

ஸ்ரீவையில் 3-ம் நாளிலும் வேட்புமனுத் தாக்கல் இல்லை

ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கு 3-வது நாளாக வெள்ளிக்கிழமையும் யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை.

ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டி. செல்வராஜ் கடந்த 5-ம் தேதி மாரடைப்பால் இறந்ததையடுத்து, இத்தொகுதியில் இடைத்தேர்தல் ஆகஸ்ட் 18-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் புதன்கிழமை (ஜூலை 22) தொடங்கியது.

முதல் 2 நாள்களில் யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை. 9 பேர் மட்டும் வேட்புமனு படிவங்களை வாங்கிச் சென்றனர்.

இந்நிலையில், 3-ம் நாளான வெள்ளிக்கிழமையும் மாலை 3 மணி வரை யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை. மேலும், சிலர் பேர் வேட்புமனு படிவங்களை வாங்கிச் சென்றுள்ளனர். இதுவரை மொத்தம் 13 பேர் வேட்புமனு படிவங்களை வாங்கிச் சென்றுள்ளனர்.

காங்கிரஸ், தேமுதிக, பாஜக உள்ளிட்ட சில கட்சிகள் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கட்சிகள் சார்பில் வேட்பாளர் பெயர் வெளியிடப்பட்ட பின்னரே அவர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்வார்கள். எனவே, வரும் திங்கள்கிழமைக்கு பின்னரே ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு வேட்புமனுத் தாக்கல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin