வெள்ளி, 31 ஜூலை, 2009

அதிமுக எம்எல்ஏ ராஜிநாமா: பேரவைத் தலைவர் ஏற்பு

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட திருச்செந்தூர் எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் இன்று தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார்.


ராதாகிருஷ்ணன் தனது ராஜிநாமா கடிதத்தை பேரவைத் தலைவர் ஆவுடையப்பனிடம் அளித்ததாகவும், ஆவுடையப்பன் அதை ஏற்றுக்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவித்தன.


கட்சிக் கட்டுப்பாட்டை மீறும் வகையில் நடந்துகொண்டதாக அதிமுக எம்எல்ஏக்கள் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் எஸ்.வி.சேகர் ஆகியோர் இரண்டு தினங்களுக்கு முன்னர் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு திமுகவில் இணையவிருப்பதாக அனிதா ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin