திங்கள், 27 ஜூலை, 2009

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிடும் சென்னை தொழிலதிபர்


தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் இடைத் தேர்தலில் தேமுதிக வேட்பாளராக சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் செளந்திரபாண்டியனை அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் நிறுத்தியுள்ளார்.

ஸ்ரீவைகுண்டம் தொகுதி இடைத் தேர்தல் வருகிற 18ம் நடைபெறுகிறது. இந்த தேர்தலை அதிமுக கூட்டணி கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. தற்போது தேமுதிக சார்பில் போட்டியிட அக்கட்சியின் மாநில வர்த்தக அணி துணைச் செயலாளராக பொறுப்பு வகித்துவரும், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த, சென்னையில் வசித்து வரும் மா.செளந்திர பாண்டியன் என்பவரை வேட்பாளராக விஜயகாந்த் நியமித்துள்ளார்.

இவர் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர். தற்போது சென்னையில் ரியல் எஸ்டேட் மற்றும் காமராஜர் பெயரில் கிங்மேக்கர் வித்யாலயா பள்ளிகயை நடத்தி வருகிறார். இவருக்கு அமுதா என்ற மனைவியும், ராகுல் என்ற மகனும், ரித்திகா என்ற மகளும் உள்ளனர். தேமுதிகவில் தீவிர உறுப்பினராக இருந்து செயல்பட்டு வருகிறார். அன்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், மேலிட பொறுப்பாளராக தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றியுள்ளார். இவர் சென்னை வில்லிவாக்கத்தில் குடியிருந்து வருகிறார்.

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள செளந்திர பாண்டியன் நமது செய்தியாளரிடம் தொலைபேசியில் பேசுகையில், தமிழ் நாட்டில் ஏற்பாட்டுள்ள கடுமையான விலைவாசி உயர்வு, மின்வெட்டு பிரச்சனை, அடிப்படை வசதி உள்ளிட்ட பிரச்சனைகளை முன்வைத்து கேப்டன் விஜயகாந்தின் தலைமையில் சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன் என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin