திங்கள், 27 ஜூலை, 2009

ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவர் ஸ்ரீவையில் போட்டியிட வேட்புமனு தாக்கல்


ஜெயலலிதா, நரசிம்மராவ் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்களை எதிர்த்து போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் நாகூர் மீரான் பீர் முகம்மது இன்று ஸ்ரீவைகுண்டம் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட, வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழகம், ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ள நாகூர் மீரான், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, முன்னாள் பிரதமர் நரசிம்மராவ், முன்னாள் கேரள முதல்வர் கருனாகரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை எதிர்த்து போட்டியி்ட்டுள்ளார். இதுவரை 40 முறை சுயேட்சையாக வேட்மனு தாக்கல் செய்து நாகூர்மீரான் போட்டியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கிருஷ்ணன் கோவில் தெருவைச் சேர்ந்தவர். சொந்தமாக ரியல் எஸ்டேட் மற்றும் புகைப்பட தொழில் செய்து வருகிறார்.

தற்போது 41வது முறையாக போட்டியிட ஸ்ரீவைகுண்டம் தொகுதி தேர்தல் அதிகாரியான துரை ரவிச்சந்திரனிடம் இன்று காலை நாகூர் மீரான் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒருமுறையாவது தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் மளம் தளராமல் போட்டியிடுவதாக தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin