புதன், 29 ஜூலை, 2009

போலீஸ் காவலில் இருந்த கைதி மரணம்: பொதுமக்கள் முற்றுகை


தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஸ்ரீமூலக்கரை கிராமத்தைச் சேர்ந்தவன் ராமர் என்ற ராமச்சந்திரன் (வயது 32). இவன் பல்வேறு திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட கைதி ஆவான்.

திருச்செந்தூர் அருகே காயல்பட்டிணம் வ.உ. நகரை சேர்ந்த தொழிலதிபர் பாத்திமா பட்சானா(39) என்பவரின் வீட்டில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 3ம் தேதி 380 சவரன் தங்கநகைகள், விலைமதிப்பு மிக்க ரூ. 2 லட்சம் மதிப்புள்ள நவரத்தின கற்கள், ரூ.33 ஆயிரத்து 500 ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது.

ராமர் என்ற ராமச்சந்திரனுக்கு 3 மனைவிகள். 8 வருடத்துக்கு முன்பு லட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்தான். பின்னர் அவளது தங்கை நேசம்மாள் என்பவரை 2-வதாக திருமணம் செய் தான். தற்போது கடந்த 5 மாதமாக தேமாஸ்குளத்தைச் சேர்ந்த ராஜலட்சுமி என்ற பெண்ணை 3-வதாக திருமணம் செய்து கொண்டு குடித்தனம் நடத்தி வந்தான்.

இதனால் ராமர் என்ற ராமச்சந்திரன் எங்கு தங்கி இருக்கிறார் என்று தெரியாமல் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் ஏரல் குற்றப்பிரிவு தனிப்படை போலீசில் கடந்த சில நாட் களுக்கு முன்பு ராமர் சிக்கினான். தூத்துக்குடி மாவட்டம் இல்லாமல் நெல்லை மாவட்டத்தில் நடந்த பல கொள்ளை சம்பவங்களிலும் ராமருக்கு தொடர்பு இருந்ததால் சிறப்பு தனிப்படை போலீசார் நிய மிக்கப்பட்டு ராமரிடம் துருவி துருவி விசாரணை நடந்தது.

மேலும் ராமரை ஆத்தூர், சாயர்புரம், நெல்லை உள்பட பல்வேறு இடங்களுக்கும் அழைத்துச் சென்றும் சிறப்பு தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.

நேற்று ஆத்தூர் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்திய போது ராமர் உடல்நிலை திடீர் கவலைக்கிடமானது. இதனால் போலீசார் அவனை ஒரு சைக்கிளில் தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி உள்ளனர். அங்கு அவனது உடல்நிலை மோச மானதால் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்துள்ளனர். அங்கு ராமர் என்ற ராமச்சந்திரன் பரிதாப மாக இறந்தான்.

இந்த சம்பவம் தூத்துக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராமரின் உறவினர்கள் ராமர் போலீ சாரால் அடித்து கொலை செய்யபட்டுள்ளார் என்று புகார் கூறி உள்ளனர்.

இதனால் ராமர் பிணம் வைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி அரசு ஆஸ் பத்திரியில் அவரது உடலை வாங்க மறுத்து ஏராளமான உறவினர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

அங்கு அசம்பாவிதம் ஏற்படாதவாறு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீசாரும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி முன்பு குவிக்கப்பட்டுள்ளனர். இது போல ஆத்தூர் போலீஸ் நிலையத்திலும் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

பிரபல கொள்ளையன் ராமர் என்ற ராமச்சந்திரன் மர்மமான முறையில் இறந்தது குறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதில் கொள்ளையன் ராமர் என்ற ராமச்சந்திரனை போலீ சார் விசாரணைக்கு பின் வீட்டுக்கு சென்றுவிட்டு இன்று வருமாறு கூறியுள்ள தாகவும், ராமர் சைக்கிளில் சென்ற போது தவறி விழுந்து படுகாயம் அடைந்ததால் ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டு இறந்ததாகவும் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது.

இதுகுறித்து தூத்துக் குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், நெல்லை சரக டி.ஐ.ஜி. கண்ணப்பன் மற்றும் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin