திங்கள், 27 ஜூலை, 2009

ஸ்ரீவைகுண்டம் இடைத்தேர்தல்: சுயேச்சை வேட்புமனு

ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கு முதலாவதாக சுயேச்சை வேட்பாளர் க.முருகன் (59) சனிக்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள பெருங்குளம் முத்தாரம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் இவர்.

விவசாயியான இவர், பெருங்குளத்தில் கேபிள் டி.வி. ஆபரேட்டராக உள்ளார். இவருக்கு லட்சுமி, ரசூல் பீவி என்ற இரு மனைவிகள், இரு மகன்கள், இரு மகள்கள் உள்ளனர்.

எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்துள்ள இவர், பெருங்குளம் பேரூராட்சி 4-வது வார்டின் முன்னாள் உறுப்பினராவார். எம்.ஜி.ஆர். மன்றத்தின் ஸ்ரீவைகுண்டம் ஒன்றியச் செயலராக பணியாற்றியுள்ளார்.
இவரது தந்தை கணபதி கடந்த 1962-ல் ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவை தொகுதியில் சுதந்திரா கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin