வெள்ளி, 24 ஜூலை, 2009

சவூதிக்கு மருத்துவர்கள் தேவை

சென்னை, ஜூலை 24, 2009

சவூதி அரேபியா நாட்டில் பணிபுரிய விருப்பமுள்ள பல்துறை சிறப்பு மருத்துவர்கள், சென்னை அடையாற்றில் உள்ள தமிழ்நாடு அரசு நிறுவனமான வெளிநாட்டுப் பணியாளர்கள் கழகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இது தொடர்பாக அதன் தலைவரும் நிர்வாக இயக்குநரும் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:

சவூதி அரேபியாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு அதிகளவில் பல்துறை சிறப்பு மருத்துவர்களைத் தேர்வு செய்யவிருப்பதாக சவூதி அமைச்சக பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

குழந்தை மருத்துவம், நரம்பியல், நீரிழிவியல், சிறுநீரியல், மகப்பேறு மருத்துவம், இதய மருத்துவம், அறுவை சிகிச்சை, பொது மருத்துவம், மூட்டு மருத்துவம், பிளாஸ்டிக் சர்ஜரி, கண் மருத்துவம், மயக்க மருத்துவம், பல் மருத்துவம், பயோ கெமிஸ்டிரி, அவசர கால மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பு மருத்துவர்களாக உள்ளவர்கள் விருப்பமும் தகுதியும் இருந்தால் உரிய ஆவணங்களுடன் 48, டாக்டர் முத்துலட்சுமி சாலை, அடையாறு, சென்னை-600 020 என்ற முகவரியில் உள்ள வெளிநாட்டு பணியாளர் கழகத்திற்கு (தமிழக அரசு நிறுவனம்) இம்மாதம் 31ஆம் தேதியன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ நேரில் வர வேண்டும்.

இவர்களுக்கு இம்மாதம் 26ஆம் தேதியிலிருந்து 31ஆம் தேதி வரை புது தில்லியிலும் ஆகஸ்டு 1ஆம் தேதியிலிருந்து 12ஆம் தேதி வரை பெங்களூரூவிலும் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். இந்தப் பணிகளுக்கான வயது வரம்பு 55. குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு அரசில் பணியாற்றும் மருத்துவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம். வெளிநாட்டு பணியாளர் அலுவலகம் ஆவணங்களைச் சரிபார்க்கும் பணிக்காக 25.07.09, 26.07.09 ஆகிய நாள்கள் திறந்திருக்கும்.

இது தொடர்பாக மேலும் விவரங்களுக்கு பின்வரும் எண்களில் தொடர்பு கொள்ளலாம். 044-24464268, 24464269, 24467557 மற்றும் மொபைல் எண்கள் 99402 76356, 94448 72516.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin