திங்கள், 27 ஜூலை, 2009

பாளை. பேராசிரியர் அமெரிக்க விருதுக்கு தேர்வு

பாளையங்கோட்டையைச் சேர்ந்த முனைவர் பா. வளன் அரசுக்கு (படம்) அமெரிக்க வாழ்வியல் நிறுவனம் "பன்னாட்டுத் தூதர்' விருது வழங்க தேர்வு செய்துள்ளது.

கல்வி, இலக்கியம், சமூகம் ஆகியவற்றில் சிறப்பாக தொண்டாற்றியவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு அமெரிக்க வாழ்வியல் நிறுவனம் பன்னாட்டுத் தூதர் விருதை வழங்கி சிறப்பித்து வருகிறது.

இந்த ஆண்டு பாளையங்கோட்டையைச் சேர்ந்த முனைவர் பா. வளன் அரசு இத்தகைய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இவர் உலகத் திருக்குறள் தகவல் மையத் தலைவராக உள்ளார்.

இவர் கடந்த 1998-ல் உலக மாமனிதர் விருதை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin