புதன், 10 ஜூன், 2009

தூத்துக்குடி எஸ்.பி. தீபக் டாமோர் சி.பி.ஐ.க்கு சென்றார்


தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளாராக செயல்பட்டு வந்த தீபக் எம் டாமோர் மத்திய புலணாய்வு பிரிவில் பணியாற்ற விருப்ப மாறுதல் கேட்டுச் சென்றுள்ளார். தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக கடந்த 2007ம் ஆண்டு ஜூலை மாதம் 29ம் தேதி பதவியேற்றுக் கொண்டார்.

இந்நிலையில் மத்திய புலனாய்வு பிரிவில் பணியாற்ற விருப்ப மாறுதல் கேட்டு சென்னை சென்றுள்ளதாக தெரிகிறது. இதனிடையே தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யாக திருநெல்வேலி எஸ்.பி. ஆஸ்ராகர்க் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக கடலூர் மாவட்ட எஸ்.பி. அஸ்வின் கோட்னிஸ் விரைவில் பதவியேற்றுக் கொள்வார் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தகவல் : தூத்துக்குடி வெப் நியூஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin