ஞாயிறு, 7 ஜூன், 2009

ஐந்தருவியின் அனைத்து அருவிகளிலும் தண்ணீர்: சுற்றுலா பயணிகள் சந்தோஷம்

குற்றாலத்தில் மீண்டும் சீசன் களைகட்டத் துவங்கியுள்ளது. குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளிலும் தண்ணீர் விழ ஆரம்பித்துவிட்டது.

குறிப்பாக ஐந்தருவியில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுவதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான செங்கோட்டை, தென்காசி ஆகிய பகுதிகளில் நேற்று மாலை முதல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குற்றாலத்திலும் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்றுடன் குளுமையான சீதோஷ்ணநிலையே நிலவி வருகிறது. கடந்த 10 நாட்களாக வெயில் அடித்து கடுமையான வெப்பத்துடனும், அருவிகளில் குறைவான தண்ணீருடனும் இருந்து வந்த குற்றால சீசன் மீன்டும் களை கட்டத் துவங்கியுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin